/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மைய தடுப்பு அமைக்க கோரிக்கை
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மைய தடுப்பு அமைக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மைய தடுப்பு அமைக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மைய தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : அக் 05, 2025 11:35 PM

வால்பாறை; வால்பாறையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, பிரதான ரோட்டில் மையத்தடுப்பு அமைக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், ரோட்டின் இருபக்கமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
குறிப்பாக, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் வழி, காந்திசிலை, ஸ்டேன்மோர் சந்திப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் ரோட்டை ஆக்கிரமித்து அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற, போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும் போது, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டில் மையத்தடுப்பு அமைக்க வேண்டும்,' என்றனர்.