/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பதில் இந்தியா நான்காமிடம்! ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் தகவல்
/
ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பதில் இந்தியா நான்காமிடம்! ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் தகவல்
ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பதில் இந்தியா நான்காமிடம்! ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் தகவல்
ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பதில் இந்தியா நான்காமிடம்! ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் தகவல்
ADDED : அக் 13, 2024 06:47 AM

போத்தனுார்: கோவை, கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின், 22வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் பொற்குமரன் வரவேற்றார். கல்வி குழும முதன்மை செயல் அலுவலர் சுந்தரராமன் உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலை தர வரிசையில் இடம் பிடித்த 34, முதுகலை முடித்த 126 மற்றும் இளங்கலை முடித்த 1099 பேர் என மொத்தம், 1235 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தலைவர் சீதாராம் பேசுகையில், ''தேசிய அளவில் தமிழகத்தில் உயர் கல்வி விகிதம் சிறந்து விளங்கு கிறது. ரோபாட்டிக்ஸ் புதிய வழிகளில் பல்வேறு தொழில்களுக்கு ஆதரவளித்திறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டுரை சமர்ப்பிப்பதில் உலகில் நான்காவது இடத்தில் நம் நாடு உள்ளது. ஐந்தாமிடத்தில் உள்ள பொருளாதாரத்தை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வர, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது,'' என்றார்.