/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை
/
கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை
ADDED : மார் 14, 2024 11:14 PM
அன்னுார்;அன்னுார் அருகே தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடத்தூர் பிரிவருகே ஒரு விவசாய தோட்டத்து கிணற்றில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிந்தது. இதையடுத்து அன்னுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி, இறந்தவரின் உடலை வெளியே எடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் இதுகுறித்து விசாரித்ததில், இறந்தவர் யார் என தெரியவில்லை. கிணற்றில் தவறி விழுந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா, என்பதும் தெரியவில்லை.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க, ஐந்தரை அடி உயரமுள்ள, கருப்பு நிற பேன்ட் அணிந்துள்ள அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.

