sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்

/

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்


ADDED : அக் 16, 2024 08:56 PM

Google News

ADDED : அக் 16, 2024 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், முன்பதிவு மையத்தை திறக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி தாலுகா சதுரங்கம் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் கூறியதாவது:

பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம், பொள்ளாச்சி வழியாக 10 ஆண்டுகளுக்கு முன் ஓடிய ரயில்களை மீண்டும் இயக்கவில்லை. கொரோனா காலத்தில் ஸ்பெஷல் ரயில் என அறிவித்து சாதாரண கட்டணத்தை, 100 மடங்கு ஏற்றி இன்று வரை குறைக்காமல் உள்ளது.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் செயல்பட்டு வந்த முன்பதிவு மையத்தை மூடி, பொதுமக்களுக்கு மன உளைச்சலையும், அதிருப்தியையும் பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

முன்பதிவு அலுவலகத்தை உடனடியாக திறந்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முன்பதிவு நேரடியாக செய்தால், ஒரு பயணச்சீட்டுக்கு 120 ரூபாய் மிச்சமாகிறது. 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்யும் போது சர்வீஸ் சார்ஜ் என சேர்த்து வசூலிக்கப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய முன்பதிவு மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us