sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுாரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

/

கல்லுாரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

கல்லுாரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

கல்லுாரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்


ADDED : நவ 19, 2024 07:59 PM

Google News

ADDED : நவ 19, 2024 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, வெளியூர் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்போது, 980 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கேரளாவை சேர்ந்த 15 மாணவர் உட்பட மொத்தம், 400 பேர், வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்.

கல்லுாரியில் மாணவியருக்கு மட்டும் தற்போது தங்கும் விடுதி வசதி உள்ளது. ஆனால், மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதி இல்லை. இதனால், கல்லுாரி வளாகத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். நிரந்தமமாக தங்கும் விடுதி இல்லாததால், வெளியூர் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் கூறியதாவது:

கோவை கலெக்டரின் முயற்சியால், கல்லுாரி மாணவர்கள் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதியிலும், கல்லுாரி வளாகத்தில் தங்கி படிக்கின்றனர்.

கல்லுாரி வளாகத்தில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு வசதியாக விடுதி வசதி ஏற்படுத்த தேர்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் விடுதி கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us