/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
/
கல்லுாரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 19, 2024 07:59 PM
வால்பாறை; வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, வெளியூர் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்போது, 980 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கேரளாவை சேர்ந்த 15 மாணவர் உட்பட மொத்தம், 400 பேர், வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்.
கல்லுாரியில் மாணவியருக்கு மட்டும் தற்போது தங்கும் விடுதி வசதி உள்ளது. ஆனால், மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதி இல்லை. இதனால், கல்லுாரி வளாகத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். நிரந்தமமாக தங்கும் விடுதி இல்லாததால், வெளியூர் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் கூறியதாவது:
கோவை கலெக்டரின் முயற்சியால், கல்லுாரி மாணவர்கள் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதியிலும், கல்லுாரி வளாகத்தில் தங்கி படிக்கின்றனர்.
கல்லுாரி வளாகத்தில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு வசதியாக விடுதி வசதி ஏற்படுத்த தேர்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் விடுதி கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு, கூறினார்.