sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

237 இனிப்பு கடைகளில் ஆய்வு

/

237 இனிப்பு கடைகளில் ஆய்வு

237 இனிப்பு கடைகளில் ஆய்வு

237 இனிப்பு கடைகளில் ஆய்வு


ADDED : அக் 16, 2025 08:54 PM

Google News

ADDED : அக் 16, 2025 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில், 237 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு தரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இனிப்பு தயாரிப்பு, விற்பனை முறைகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட இனிப்பு தயாரிப்பு கடைகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:

தயாரிப்பு விபரங்கள், காலாவதி விபரங்கள் இன்றி விற்பனை செய்யக்கூடாது. கையுறை, முடிக்கவசம் கட்டாயம் பயன்படுத்தவேண்டும்.தீபாவளி முன்னிட்டு கடந்த சில நாட்களில், 237 இனிப்பு தயாரிப்பு, விற்பனை இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளை ஆய்வு செய்த போது, சிலர் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இல்லாமல் இருந்தது தெரிந்து எச்சரித்து; உடனடியாக பதிவு செய்து கொடுத்துள்ளோம். தொடர்ந்து ஆய்வுகள் நடந்துவருகின்றன. விதிமுறை மீறல் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us