sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டுச்சாவடி மையங்களில் சப்- கலெக்டர் ஆய்வு

/

ஓட்டுச்சாவடி மையங்களில் சப்- கலெக்டர் ஆய்வு

ஓட்டுச்சாவடி மையங்களில் சப்- கலெக்டர் ஆய்வு

ஓட்டுச்சாவடி மையங்களில் சப்- கலெக்டர் ஆய்வு


ADDED : பிப் 20, 2024 05:11 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் வசதிகள் குறித்து சப் - கலெக்டர் ஆய்வு செய்தார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதையடுத்து, அதிகாரிகள் குழுவினர் அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர், பொள்ளாச்சி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டு தேவையான வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, இளம் வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஓட்டு அளிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், வரும், 23ல் தமிழகம் வருகின்றனர். தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, 28ம் தேதிக்குள் முடிக்க, தேர்தல் பிரிவினருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் பிப்., இறுதிக்குள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இம்மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி, பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில், தாசில்தார் ஜெயசித்ரா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களை ஆய்வு செய்தனர்.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மொத்தம், 269 ஓட்டுச்சாவடி மையங்களில் நேரடியாக ஆய்வு செய்து, கழிப்பிடம், குடிநீர், சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சிறு குறைபாடுகள் உள்ளதை கண்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us