sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டில் 'ரிப்ளக்டர்' பொருத்துங்க! வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

/

ரோட்டில் 'ரிப்ளக்டர்' பொருத்துங்க! வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

ரோட்டில் 'ரிப்ளக்டர்' பொருத்துங்க! வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

ரோட்டில் 'ரிப்ளக்டர்' பொருத்துங்க! வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை


ADDED : செப் 08, 2025 10:04 PM

Google News

ADDED : செப் 08, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை நகரிலிருந்து சோலையாறு அணை வரை செல்லும் ரோட்டில் விபத்துக்களை தடுக்க, இரவு நேரத்தில் ஒளிரும் 'ரிப்ளக்டர்' அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகரில் இருந்து சோலையாறு அணை வழியாக, கேரள மாநிலம் சாலக்குடி ரோட்டில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் செல்கின்றனர்.

குறிப்பாக, வால்பாறை நகரில் இருந்து பழைய வால்பாறை, உருளிக்கல் வழியாக சோலையாறு அணை வரை செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் பல இடங்களில் வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை.

குறிப்பாக, மாதா கோவில் சந்திப்பு, பழைய வால்பாறை, மானாம்பள்ளி பிரிவு உள்ளிட்ட இடங்களில் வழிகாட்டி பலகை முறையாக வைக்கப்படவில்லை.

மேலும், வால்பாறையிலிருந்து சோலையாறு அணை செல்லும் ரோட்டில் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் முக்கிய இடங்களில் 'ரிப்ளக்டர்' இல்லாததால் அடிக்கடி வாகனங்கள் விபத்துள்ளாகி உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இது குறித்து வாகனஓட்டுநர்கள் கூறியதாவது:

வாகனங்களால் விபத்து ஏற்படாமல் தவிர்க்க, வால்பாறை நகரிலிருந்து ஆழியாறு வரையிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 'சோலார் ரிப்ளக்டர்' அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை ரோட்டில் இரவு நேரங்களில் வாகன விபத்தும் குறைந்துள்ளது.

அதே போல், வால்பாறையிலிருந்து சோலையாறு அணை வரையிலும் இரவு நேரத்தில் ஒளிரும் 'ரிப்ளக்டர்கள்' பொருத்த வேண்டும். வால்பாறை - சோலையாறு அணை செல்லும் ரோடு வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ரோடாக உள்ளதால், இந்த ரோட்டில் 'ரிப்ளக்டர்கள்' அமைப்பது மிக அவசியம்.

மேலும், முக்கியான இடங்களில் 'ஸ்பீடு பிரேக்' அமைக்கவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us