sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடியிருப்பு பகுதி பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துங்க!

/

குடியிருப்பு பகுதி பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துங்க!

குடியிருப்பு பகுதி பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துங்க!

குடியிருப்பு பகுதி பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துங்க!


ADDED : ஏப் 21, 2025 04:53 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்,' என, பொள்ளாச்சியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சி, 13வது வார்டில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது:

குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த குடியிருப்பு பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அனைவரும் முன்வர வேண்டும். குற்றம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக பிடிக்க வாய்ப்பாக இருக்கும். மேலும், வீட்டின் பாதுகாப்பினையும் உறுதி செய்யலாம்.

பெண்கள் அதிகளவு நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.பாலியல் குற்றங்களை தவிர்க்க குழந்தைகளிடம் நல்லது எது, கெட்டது எது என தெரிவிக்க வேண்டும். குழந்தைகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அதை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

கவுன்சிலர் மணிமாலா, தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us