sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலக்கிய மன்ற போட்டிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

/

இலக்கிய மன்ற போட்டிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

இலக்கிய மன்ற போட்டிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

இலக்கிய மன்ற போட்டிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 30, 2025 09:26 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் அரசுப்பள்ளிகளில், இலக்கிய மன்றம் மற்றும் வினாடி-வினா போட்டிகளை நடத்தி முடிக்க, மாவட்ட பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பள்ளியளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் மற்றும் வினாடி-வினா போட்டிகளை, இம்மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. போட்டிகளின் விவரங்களை, எமிஸ் தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும், வினாடி-வினா போட்டிகளை 4,764 பள்ளிகள் நடத்தி முடித்துள்ளன. ஆனால் 8,455 பள்ளிகளில் இப்போட்டிகள் இன்னும் நடத்தப்படவில்லை.

அதேபோல், இலக்கிய மன்ற போட்டிகள் 13,258 பள்ளிகளில் நடத்தப்பட வேண்டிய நிலையில், 6,374 பள்ளிகளில் மட்டுமே இதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம், ராணிபேட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளில், 70 சதவீதத்திற்கு மேல் இப்போட்டிகள் நடைபெறவில்லை.

கோவை மாவட்டத்தில், வினாடி-வினா போட்டிகள் 183 பள்ளிகளில் நடத்தப்படவில்லை. இலக்கிய மன்ற போட்டிகள் 279 பள்ளிகளில் நடத்தப்பட்டு, எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், 150 பள்ளிகளில் நடத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட ஒன்றியங்களில் இந்த பணிகளை விரைந்து முடிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us