sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஏ.டி.எம்., கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை

/

ஏ.டி.எம்., கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை

ஏ.டி.எம்., கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை

ஏ.டி.எம்., கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை


ADDED : செப் 30, 2024 06:25 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏ.டி.எம்., கொள்ளையன் ஆசர் அலியிடம் குமாரபாளையம் நீதிபதி மாலதி, நேரில் விசாரணை நடத்தினார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், மூன்று ஏ.டி.எம்.,களை உடைத்து கொள்ளையடித்து தப்பிய வடமாநில கொள்ளை கும்பலை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு போலீசார் பிடித்தனர்.

அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற இரண்டு பேர் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் சுமைன் என்பவர் உயிரிழந்தார். ஆசர் அலி காலில் குண்டு பட்டு காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குமாரபாளையம் நீதிபதி மாலதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஆசர் அலியிடம், நேற்று மாலை முதல் நான்கு மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, வாக்கு மூலம் பதிவு செய்தார்.






      Dinamalar
      Follow us