ADDED : நவ 15, 2025 10:21 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் மாதாந்திர கூட்டம், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடந்தது.
இந்த கூட்டத்தில், கோவை மண்டல பி.எப்., அலுவலகம் சார்பில், புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி தரும், பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் குறித்து, கோவை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாந்த் பேசுகையில், ''இது தொழிலாளர்களுக்கும், வேலை வழங்குவோருக்கும் பலன் தரும் திட்டமாகும். வேலை வழங்குவோர், ஊழியர்களை இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும்,'' என்றார்.
