/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு
/
முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு
ADDED : ஜூன் 26, 2025 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிக கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லுாரி அரங்கில் நடந்தது. கோவை மனித உரிமை மன்றத்தின் நிறுவனர் சாரதி பங்கேற்று நிகழ்வுகளை துவக்கிவைதத்தார்.
இந்நிகழ்வில், கல்லுாரி சீனியர் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை, பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து , கல்லுாரி செயல்பாடுகள், விடுதி வசதிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், சி.எம்.எஸ்., கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் தலைவர் கிரீசன், உபதலைவர் சஜீஷ் குமார், இணைச்செயலாளர் சசிதரன், துணை முதல்வர் சாலினி, தேர்வு கட்டுப்பாட்டாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.