/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : அக் 03, 2025 09:49 PM
கோவை: அகில இந்திய தொழிற்தேர்வு எழுத தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு கட்டணமாக ரூ.200- செலுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள, மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (தியரி) தேர்வு நவ. 4 அன்றும், செய்முறை தேர்வு நவ. 5 அன்றும், கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
இதற்கான முழு வழி காட்டுதல், www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வராக தேர்வெழுத வரும் 8ம் தேதியே கடைசி.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.