/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் துறையில் வேலை திரளாக பங்கேற்க அழைப்பு
/
தனியார் துறையில் வேலை திரளாக பங்கேற்க அழைப்பு
ADDED : ஏப் 23, 2025 12:45 AM
பொள்ளாச்சி, ; கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும்,25ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
இம்மாதத்துக்கான முகாம், வரும் 25ம் தேதி, மாவட்ட வேலை வாய்ப்பு மைய வளாகத்தில் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்கள் சுய விபரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.
பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மனுதாரர்கள்,www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு,0422-2642388என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

