sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்

/

நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்

நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்

நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 14, 2025 08:03 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு வார்டை தவிர மீதமுள்ள வார்டுகளில் தி.மு.க., வை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒருவர் மட்டும் கவுன்சிலராக உள்ளார்.

தி.மு.க.,வை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். இந்நிலையில், வால்பாறை நகராட்சியில் வளர்ச்சிப்பணி என்ற பெயரில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி ஒட்டு மொத்த கவுன்சிலர்கள் தலைவருக்கு எதிராக குரல் எழுப்பி வருவதோடு, தொடர்ந்து மூன்று முறை மன்றக்கூட்டமும் நடத்தவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின்கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி, வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வால்பாறை நகராட்சியில், தெருவிளக்கு, ரோடு, படகு இல்லம், துாய்மை பணிகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன் வரும், 20ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us