sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண் ஈரம் பொறுத்து நீர்பாசனம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

/

மண் ஈரம் பொறுத்து நீர்பாசனம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மண் ஈரம் பொறுத்து நீர்பாசனம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மண் ஈரம் பொறுத்து நீர்பாசனம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


ADDED : ஜன 31, 2024 01:12 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில் அடுத்து வரும் நாட்களில், வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. மண் ஈரத்தினை பொறுத்து இறவை பயிர்களுக்கு நீர்பாசனம் செய்து, பயிர் கழிவு மூடாக்கு செய்ய விவசாயிகளுக்கு, வேளாண் பல்கலை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்து நாட்கள், 30-32 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை19-20 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 40 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.

விவசாய நிலங்களில் அறுவடை முடிந்த பின், கோடைகால மழையின் ஈரப்பதத்தை சேகரிக்க முன்னேற்பாடு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

நிலவும் வானிலையில், நெற்பயிரில் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி டைக்குளோவாஸ் கலந்து தெளிக்கவும்.

நீர்பாசனம் உள்ள இடங்களில் மட்டும் இறவை மக்காச்சோள விதைப்பினை மேற்கொள்ளலாம். தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு, முன்பருவ கரும்பு சாகுபடியை உடனடியாக மேற்கொள்வதன் வாயிலாக, அதிக மகசூல் பெறமுடியும். மஞ்சள் கிழங்கு முதிர்வடையும் நிலையில் இருப்பதால், அளவான தண்ணீர் பாய்ச்ச அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us