sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

‛'இல்லக்கனவு' இனி வெறும் கனவுதானோ? கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு

/

‛'இல்லக்கனவு' இனி வெறும் கனவுதானோ? கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு

‛'இல்லக்கனவு' இனி வெறும் கனவுதானோ? கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு

‛'இல்லக்கனவு' இனி வெறும் கனவுதானோ? கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு

2


ADDED : ஜூலை 09, 2025 10:28 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:28 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கட்டுமானப் பொருட்களின் விலை, 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், வீடு கட்டிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் கல் குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு, அரசுக்கு இதுவரை கனமீட்டர் அடிப்படையிலேயே வரி செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது மெட்ரிக் டன் அடிப்படையில், வரி செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. வீடு கட்டுவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

டிப்பர் லாரியில் 4 யூனிட் எம்.சாண்ட்டுக்கு, 18 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், புதிய நடைமுறையால், 22 ஆயிரம் வரை நிலை நிர்ணயிக்கப்பட்டது. கட்டுமானத்தில் எம்.சாண்ட் கொண்டே 80 சதவீத பயன்பாடு உள்ள நிலையில், வீடு கட்டிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.

இதை கண்டித்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் முழுவதும், கட்டுமானத் துறையினர் போராட்டம் நடத்தினர். விலையை குறைக்கக் கோரி அரசு தெரிவித்த நிலையில், சொற்பத் தொகை மட்டுமே குறைக்கப்பட்டது.

எதிர்பார்த்த அளவு விலை குறைக்கப்படாத நிலையில், இல்லக் கனவை நிறைவேற்ற வங்கியில் கடன் வாங்கி காத்திருப்போர் விழிபிதுங்கியுள்ளனர்.

கட்டுமானத் துறையினர் சிலர் கூறியதாவது:

எம்.சாண்ட், செங்கல், ஜல்லிக்கற்கள், சிமென்ட் உட்பட கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த விலையை விட, 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. நடப்பாண்டு ஐந்து முறை, சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு, வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருப்போர், இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

பொறியாளருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் சில நேரங்களில், இதனால் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு பிரச்னைக்கு, அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us