sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு ஊழியர் வீடுகளுக்கே இந்த நிலையா.. போராட்டத்தை தடுக்க இறங்கி வந்த அதிகாரிகள்

/

அரசு ஊழியர் வீடுகளுக்கே இந்த நிலையா.. போராட்டத்தை தடுக்க இறங்கி வந்த அதிகாரிகள்

அரசு ஊழியர் வீடுகளுக்கே இந்த நிலையா.. போராட்டத்தை தடுக்க இறங்கி வந்த அதிகாரிகள்

அரசு ஊழியர் வீடுகளுக்கே இந்த நிலையா.. போராட்டத்தை தடுக்க இறங்கி வந்த அதிகாரிகள்


ADDED : ஜூன் 15, 2025 10:28 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கழிவுநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 1,848 வீடுகள் உள்ளன. அரசு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இக்குடியிருப்பானது, எட்டு 'பிளாக்'குகளை கொண்டுள்ளது.

இக்குடியிருப்பு வளாகத்தில் ரோடு மோசம், கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறுதல், குடிநீர் வினியோகம் குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பதாக, குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர்.

ஆனால், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வீட்டுவசதி வாரிய வளாகத்தில் குப்பை கொட்டும் இடம் அருகே, உயர் அதிகாரிகள் வரும் வரை, காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை தயாராக இருந்தனர்.

தகவல் அறிந்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us