/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்கும் ஆர்வத்தை துாண்டுதல் அவசியம்; எண்ணும், எழுத்தும் பயிற்சியில் தகவல்
/
கற்கும் ஆர்வத்தை துாண்டுதல் அவசியம்; எண்ணும், எழுத்தும் பயிற்சியில் தகவல்
கற்கும் ஆர்வத்தை துாண்டுதல் அவசியம்; எண்ணும், எழுத்தும் பயிற்சியில் தகவல்
கற்கும் ஆர்வத்தை துாண்டுதல் அவசியம்; எண்ணும், எழுத்தும் பயிற்சியில் தகவல்
ADDED : ஜூன் 10, 2025 09:39 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.2025 - 2027ம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், எண்ணும், எழுத்தும் சார்ந்த, 2025 - 2026ம் கல்வியாண்டுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் (ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை); தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் (நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை) முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கியுள்ளது.
இதற்காக ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
* பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமைய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
பயிற்சியில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட புத்தகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள், மதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளில் அடிப்படையில் எண்ணும், எழுத்தும் ஆசிரியர் கையேட்டில் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
மொத்தம், 189 ஆசிரியர்கள் பங்கேற்றனர். வட்டார கல்வி அலுவலர்கள் நேசமணி,வெள்ளிங்கிரி பயிற்சியினை பார்வையிட்டனர்.
* தெற்கு வட்டார வள மைய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் நடந்த பயிற்சியில், 213 ஆசிரியர்கள் பங்கேற்றனர். வட்டார கல்வி அலுவலர்கள் சின்னப்பராஜ், கிளாரி ஸ்டெல்லா, மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர்.
வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறியதாவது:
குழந்தைகளின் அனைத்து வகையான கல்விக்கும் அடிப்படை ஆணிவேராக அமையும் தொடக்க கல்வியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை துாண்டுதல், குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தல்; கற்றல் அடைவுகளை குழந்தைகளை பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விளையாடலாம் வாங்க, மின்னும் வைரங்கள், சொற்பொட்டியல் விரும்பிச் செய்வோம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இவ்வாறு, கூறினர்.