sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து 12 வருஷமாச்சுங்க! 'ரிசர்வ் சைட்' மீட்காமல் துாங்கும் நகரமைப்பு பிரிவினர்

/

மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து 12 வருஷமாச்சுங்க! 'ரிசர்வ் சைட்' மீட்காமல் துாங்கும் நகரமைப்பு பிரிவினர்

மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து 12 வருஷமாச்சுங்க! 'ரிசர்வ் சைட்' மீட்காமல் துாங்கும் நகரமைப்பு பிரிவினர்

மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து 12 வருஷமாச்சுங்க! 'ரிசர்வ் சைட்' மீட்காமல் துாங்கும் நகரமைப்பு பிரிவினர்


ADDED : ஜூலை 01, 2024 12:01 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என நீதிமன்றம் தீர்ப்பளித்து, 12 ஆண்டுகளாகியும், 18 ஆயிரத்து, 886 அடி பொது ஒதுக்கீடு இடத்தை மீட்காமல், நகரமைப்பு பிரிவினர் துாங்கி வழிகின்றனர்.

கோவை மாநகராட்சி, 58வது வார்டு, நந்தா நகர் ரோட்டில், லட்சுமணன் நகரில், சிங்காநல்லுார் கூட்டுறவு சங்கத்தால், 1982ல் லே-அவுட் உருவாக்கப்பட்டு, மனைகள் விற்கப்பட்டன. பொது ஒதுக்கீட்டுக்காக (ரிசர்வ் சைட்) கிணறு மற்றும் பூங்காவுக்கு ஒதுக்கிய இடமும் விற்கப்பட்டு, ஐந்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கியவர்கள், அதை முறைப்படுத்துவதற்காக, கோவை இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு, 2012ல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சிங்காநல்லுார் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் அனுமதி பெற்றுள்ள வரைபடத்தில், 51 மனைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பூங்கா மற்றும் கிணறுக்கு ஒதுக்கப்பட்ட இடமாக உள்ளது. லே-அவுட் அனுமதி பெறும்போது, பிளாட் எண்: 49, 50, 51 என காண்பிக்காமல், பொது உபயோகத்துக்கு என கூறி வரைபடம் தாக்கல் செய்திருக்கின்றனர். இதனடிப்படையில், நகர ஊரமைப்புத்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

நகர ஊரமைப்பு துறை இயக்குனரின் முன்அனுமதியின்றி, அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக அல்லது வரையறுக்கப்பட்ட பொது இடத்துக்கு மாறாக மாற்றங்கள் எதுவும் செய்யக்கூடாது என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி சட்டப்படி, அவ்விடங்களை மாநகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், 1997ல் சிங்காநல்லுார் கூட்டுறவு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி, புதிதாக உருவாக்கிய மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் தருமாறு மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. இத்திருத்தங்கள் செய்வதற்கு, நகர ஊரமைப்பு துறை இயக்குனரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், 1988ம் ஆண்டே அவ்விடங்கள் விற்கப்பட்டுள்ளன.

அதேநேரம், பொது இடமாக ஒதுக்கப்பட்ட, 18 ஆயிரத்து, 886 அடி இடம் அரசுக்கு சொந்தமானவை என, அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், 10 சதவீதத்துக்கு அதிகமான இடம் கொடுத்து விட்டோம்; மீதமுள்ள இடத்தை 'அப்ரூவ்டு லே-அவுட்'டாக மாற்றித் தர வேண்டுமென மாநகராட்சியில் கூட்டுறவு சங்கம் கோரிக்கை வைத்திருப்பது முறையற்ற செயல்.

வழக்கு தொடர்ந்திருப்பவர்கள் தாக்கல் செய்துள்ள வரைபடம் வேறுபட்டு இருக்கிறது. ஏற்கனவே அனுமதி பெற்ற வரைபடத்தை மறைத்து, பொது ஒதுக்கீடு இடத்தை மாற்றியமைத்து, போலியான வரைபடத்தை உருவாக்கி, விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பொது இடத்தை வாங்கியவர்கள் மற்றும் வீடு கட்டியவர்களுக்கான இழப்பீட்டை, சிங்காநல்லுார் கூட்டுறவு சங்கமே வழங்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை நிறைவேற்றக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு மனு அனுப்பினர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் இருந்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 2023ல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களுக்கு நோட்டீஸ் வினியோகித்தும் ஓராண்டாகப் போகிறது, சம்பந்தப்பட்ட பொது ஒதுக்கீடு இடத்தை, மாநகராட்சி வசம் கொண்டு வராமல், நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை பார்க்கின்றனர். இனியாவது, மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு அவ்விடத்தை பெயர் மாற்றம் செய்து, பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்தால், வேறு நபர்களுக்கு சொத்து பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும். அதன்பின், அச்சொத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us