sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆச்சு: நிலம் அளந்து தரவில்லை என புகார்

/

பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆச்சு: நிலம் அளந்து தரவில்லை என புகார்

பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆச்சு: நிலம் அளந்து தரவில்லை என புகார்

பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆச்சு: நிலம் அளந்து தரவில்லை என புகார்


ADDED : அக் 25, 2025 01:04 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: 'பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆகியும் நிலம் அளந்து தரவில்லை,' என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கஞ்சப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சொந்த இடமும் வீடும் இல்லாத 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 80 பேருக்கு மட்டும் 1996, 2007 ஆகிய ஆண்டுகளில் கஞ்சப்பள்ளியில் இலவச வீட்டு மனை பட்டா தரப்பட்டது.

இதில் 80 பேருக்கு பட்டா தந்தும் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் அளந்து தரப்பட்டது. 90 சதவீதம் பேருக்கு நிலம் அளந்து ஒதுக்கி தரப்படவில்லை.

இதனால் வீடு கட்ட முடியவில்லை. வாடகை வீட்டில் குடியிருக்கிறோம். ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றன.

எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பிரித்து ஒதுக்கி அளந்து தர வேண்டுமென தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் கிராம சபை கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

உடனடியாக எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்குரிய நிலத்தை அளந்து ஒதுக்கி தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us