/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெ.சி.ஐ., அமைப்பின் நிர்வாகிகள் பதவியேற்பு
/
ஜெ.சி.ஐ., அமைப்பின் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜன 05, 2026 05:27 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
பொள்ளாச்சி ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜெ.சி.ஐ. பொள்ளாச்சி பிரைடு) அமைப்பின், 2026ம் ஆண்டுக்கான, இரண்டாவது பதவியேற்பு விழா, பொள்ளாச்சி மீனாட்சி அம்மன் மஹாலில் நடந்தது.
ஜெ.சி.ஐ. இந்தியா முன்னாள் தேசிய நிர்வாக துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், விழாவை துவக்கி வைத்தார். மேலும், ஜெ.சி.ஐ. இந்தியா மண்டலம் - 17 தலைவர் பிரேம் சரண், மதிவாணன், ஸ்டார்ட் அப் பயணம் நிறுவனர் நவீன் கிருஷ்ணா ஆகியோர் பேசினர். பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் பேசினார். தொடர்ந்து, புதிய நிர்வாக குழு தலைவர் அஜித் இளக்குவன், செயலாளர் கருப்பையன், பொருளாளர் வளர்மதி, கோவிந்தராஜ் ஆகியோர் பதவியேற்றனர்.
மேலும், மண்டல, பகுதி அளவிலான ஜெ.சி.ஐ. நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

