sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உதவுவது போல் நடித்து ரயிலில் நகை, பணம் திருட்டு

/

உதவுவது போல் நடித்து ரயிலில் நகை, பணம் திருட்டு

உதவுவது போல் நடித்து ரயிலில் நகை, பணம் திருட்டு

உதவுவது போல் நடித்து ரயிலில் நகை, பணம் திருட்டு


ADDED : ஜன 22, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 22, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ரயிலில் பயணித்த பெண்ணுக்கு, உதவுவது போல் நடித்து, நகை பணத்தை திருடிய பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

போத்தனுாரை அடுத்த செட்டிபாளையம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் காசி; மனைவி சங்கீதா, 30. இவர் சில நாட்களுக்கு முன், மொரப்பூர் சென்றிருந்தார். பின்னர், கடந்த 20ம் தேதி மொரப்பூரில் இருந்து, ரயிலில் கோவை புறப்பட்டார்.

ரயிலில் வந்த போது, பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு பெண், சங்கீதாவிடம் பேச்சு கொடுத்தார். இருவரும் பேசிக்கொண்டே பயணம் செய்தனர். கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், சங்கீதா தனது இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த பெண், சங்கீதாவுக்கு உதவுவதாக கூறி, அவரின் ஒரு பையை தான் எடுத்து வருவதாக கூறி வாங்கியுள்ளார். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அந்த பெண் சங்கீதாவிடம் பையை கொடுத்து சென்று விட்டார். சங்கீதா தனது பையில் இருந்து, பணம் எடுப்பதற்காக திறந்து பார்த்த போது, அதிலிருந்த ரூ. 35 ஆயிரம் பணம், தங்க கம்மலை காணவில்லை.

சங்கீதா அளித்த புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us