sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆஞ்சநேயர் சுவாமிக்கு 'ஜாங்கிரி அலங்காரம்'

/

ஆஞ்சநேயர் சுவாமிக்கு 'ஜாங்கிரி அலங்காரம்'

ஆஞ்சநேயர் சுவாமிக்கு 'ஜாங்கிரி அலங்காரம்'

ஆஞ்சநேயர் சுவாமிக்கு 'ஜாங்கிரி அலங்காரம்'


ADDED : அக் 06, 2024 03:31 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே உள்ள அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, 1008 ஜாங்கிரியால் சுவாமியை அலங்கரித்து, விசேஷ சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சிறுமுகை அடுத்த பொகலூர் அருகே, தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி குடியிருப்பு பகுதியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. ஸ்தபந திருமஞ்சனம், சுதர்ஸன ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன.

அடுத்து ஆஞ்சநேயருக்கு, புதிய வஸ்திரம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1008 ஜாங்கிரியால் சுவாமிக்கு அலங்காரம் செய்தனர்.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தாஸன் ரிஷி பட்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us