ADDED : மார் 02, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
கோவை: சிங்காநல்லுார் வீட்டு வசதி வாரியவீட்டு உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த மறு கட்டமைப்பிற்கான கூட்டு நடவடிக்கை குழுவின் பொதுக்குழு கூட்டம், வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், இடிந்துவிழும் நிலையில் இருந்த 960 வீடுகளின் மறு கட்டமைப்பை உறுதி செய்த வீட்டு வசதி வாரிய துறைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டு நடவடிக்கை குழுவின் பதவிக்காலம் கடந்த பிப். 6 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர்வதற்கு அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
