/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோரம் பூத்துக்குலுங்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
/
சாலையோரம் பூத்துக்குலுங்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
சாலையோரம் பூத்துக்குலுங்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
சாலையோரம் பூத்துக்குலுங்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
ADDED : நவ 21, 2025 06:17 AM

வால்பாறை: வால்பாறையில் பருவமழைக்கு பின் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வனப்பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துகுலுங்குகின்றன. வடகிழக்குப் பருவமழை சாரல்மழையாக பெய்யும் நிலையில், எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், மாலை நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
இதனால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கை மற்றும் கால்களில் பாதுகாப்பு கவசம் அணிந்து தேயிலை பறிக்கின்றனர்.
வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கார்த்திகை மாதம் மட்டுமே பூத்துக்குலுங்கும் கார்த்திகை பூக்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியிலும், சாலையோரங்களிலும் பரவலாக பூத்துக்குலுங்குகின்றன. வெள்ளை நிறப்பூக்களை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.

