sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்குவரத்து மாற்றத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் ஆய்வு

/

போக்குவரத்து மாற்றத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் ஆய்வு

போக்குவரத்து மாற்றத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் ஆய்வு

போக்குவரத்து மாற்றத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் ஆய்வு


ADDED : பிப் 06, 2025 10:54 PM

Google News

ADDED : பிப் 06, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; நீதிமன்ற வளாகம் அருகில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகர போக்குவரத்து போலீசார், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், எந்த முன்அறிவிப்பு இன்றி, சாலையை மாற்றி அமைத்தனர். இதனால், கோர்ட் அருகில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாநகர போக்குவரத்து அதிகாரிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, போக்குவரத்து அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், சார்பு நீதிபதி ரமேஷ் மற்றும் வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், சாலை பாதுகாப்பு அதிகாரி மற்றும் மனுதாரர் ராஜலிங்கம் சார்பில் வக்கீல் அசோக் ஆகியோர், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us