sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்யாணி யானை நலம்; 4.5 டன் எடையுடன் பலம்

/

கல்யாணி யானை நலம்; 4.5 டன் எடையுடன் பலம்

கல்யாணி யானை நலம்; 4.5 டன் எடையுடன் பலம்

கல்யாணி யானை நலம்; 4.5 டன் எடையுடன் பலம்


ADDED : மார் 27, 2025 12:25 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணியின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்த வனத்துறையினர், யானை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான யானை, கல்யாணி. 33 வயது. இந்த யானையை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இருப்பினும், யானையின் உடல்நலம் குறித்து, வனத்துறையினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம்.

நேற்று கல்யாணி யானையின் உடல் நலம் குறித்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வில், கல்யாணி யானை, 4.5 டன் எடையுள்ளது. நல்ல உடல் நலத்துடன் உள்ளது தெரியவந்தது.

கோடை வெயில் காரணமாக, யானையை, நாள்தோறும், 4 முறை குளிக்க வைக்க வேண்டும் எனவும், வனத்துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

ஆய்வின்போது, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா, பேரூர் கால்நடை உதவி டாக்டர் சாந்தி, கோவை வனச்சரகர் திருமுருகன், வனக்கால்நடை டாக்டர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us