/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பக விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி விழா
/
கற்பக விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி விழா
ADDED : அக் 29, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: சுந்தராபுரம் அருகே காந்தி நகரிலுள்ள கற்பக விநாயகர் கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 22ல் முகூர்த்த கால் நடுதல், முளைப்பாரி இடுதல், காப்பு கட்டுதல் உள்ளிட்டவையுடன் துவங்கியது.
மறுநாள் முதல், நேற்று முன்தினம் வரை, தினமும் உற்சவ மூர்த்தி முருகருக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.
நேற்று காலை பால் குட அபிஷேகம், மகா அலங்காரம், தீபாராதனையும், மதியம் மாப்பிள்ளை, பெண் வீட்டாரை அழைத்து வருதலும் நடந்தன. மாலை, வள்ளி தேவசேனா சமேத முருகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

