நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், கந்த சஷ்டி விழா விழா துவங்கியது.
பிரசித்தி பெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 64 வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவங்கியது. காலை 6:00 மணிக்கு, காப்பு கட்டப்பட்டது, இதையடுத்து வேள்வி பூஜை நடந்தது.
வள்ளி தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

