/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
/
கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
ADDED : நவ 06, 2024 11:41 PM
கோவை; கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடக்கிறது.
கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கந்தசஷ்டி விழா நவ., 2 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று சுப்ரமணிய சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அன்றாடம் மாலை 6:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமி குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. இன்று மாலை முருகன் பெருமை சொற்பொழிவும், நாளை மாலை திருப்புகழ் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
நேற்று மாலை தேவார திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு கந்த சஷ்டி மஹா அபிஷேக நிகழ்ச்சியும், மஹா அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. வைசியாள்வீதி, கருப்பகவுண்டர்வீதி, ராஜவீதி,பெரியகடைவீதிகளில் முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை அறநிலையத்துறை சார்பில் சொற்பொழிவாளர் கோமதி வர்ணனை செய்கிறார்.
நாளை மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து மாங்கல்யா பிரசாதம் வழங்குதலும், தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடக்கிறது. நிறைவாக வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி,தெய்வானை சமேதராக சுவாமி திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.