sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலெக்டரிடம் கரியாம்பாளையம் மக்கள் சரமாரி புகார்

/

கலெக்டரிடம் கரியாம்பாளையம் மக்கள் சரமாரி புகார்

கலெக்டரிடம் கரியாம்பாளையம் மக்கள் சரமாரி புகார்

கலெக்டரிடம் கரியாம்பாளையம் மக்கள் சரமாரி புகார்


ADDED : ஏப் 04, 2025 11:35 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் தாலுகா அலுவலகத்தில், நேற்று கோவை கலெக்டர் பவன் குமார் ஆய்வு செய்தார்.

அப்போது அவரிடம், கரியாம்பாளையம் கிராம மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'இங்கு நான்கு ஆண்டுகளாக செயல்படும் தனியார் நிறுவனத்திலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூச்சு விட முடியவில்லை. நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது; வாந்தி வருகிறது.

கால்நடைகள் நோய்வாய்ப்பட்டுள்ளன. இதுகுறித்து பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை.10 நாட்களுக்கு முன்பு உங்களிடமும் கரியாம்பாளையத்தில் மனு கொடுத்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை,' என சரமாரியாக புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வருவாய் துறையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பின்னர் ஊராட்சி ஒன்றிய தெற்கு துவக்கப்பள்ளியில் மாணவர்களிடம் கேள்வி கேட்டார். மாணவர்களுக்கு கணக்கு பாடம் கற்பித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் குப்பை கூளங்கள், பழைய பொருட்கள் கிடந்தன. 'ஏன் இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளீர்கள். பழைய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்,' என கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us