/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழநிக்கு வந்த வால்பாறை பறவை காவடி
/
பழநிக்கு வந்த வால்பாறை பறவை காவடி
ADDED : பிப் 23, 2024 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பின்னும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக காவடி எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 48 ஆண்டுகளாக பால்காவடி, தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து வருகின்றனர். நேற்று, அவர்கள் பழநி சண்முக நதி அருகே ராட்சத கிரேனில் 9 பக்தர்கள் பறவைக்காவடியில் தொங்கியபடியும், 10 பக்தர்கள் 15 அடி நீள அலகு குத்தியும் கிரி வீதியில் வலம் வந்தனர். அலகு குத்தி வந்தவர்களிடம் பலரும் குழந்தைகளை கொடுத்து ஆசி பெற்றனர்.