sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேரள மாவோயிஸ்ட்டுக்கு   நிபந்தனை தளர்த்தி உத்தரவு 

/

கேரள மாவோயிஸ்ட்டுக்கு   நிபந்தனை தளர்த்தி உத்தரவு 

கேரள மாவோயிஸ்ட்டுக்கு   நிபந்தனை தளர்த்தி உத்தரவு 

கேரள மாவோயிஸ்ட்டுக்கு   நிபந்தனை தளர்த்தி உத்தரவு 


ADDED : ஏப் 04, 2025 11:41 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கேரள மாவோயிஸ்ட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, தளர்த்தி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், கேரளத்தை சேர்ந்த ரூபேஷ்,54, மனைவி ஷைனி,52, அனுாப்,37, மற்றும் கண்ணன்,56, வீரமணி,69,ஆகியோர், மே 2015 ல், கோவை 'கியூ' பிரிவு போலீசாரால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில், ைஷனி, கண்ணன், வீரமணி ஆகியோர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அனுாப் கடந்தாண்டு நவம்பரில், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். கோவை கியூ பிரிவு போலீசில், தினசரி காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், நிபந்தனையை தளர்த்தக்கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அனுாப் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி விஜயா, மாதத்தில் ஏதாவது ஒரு திங்கள் கிழமை, காலை 10:30 மணிக்கு, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜராகி கையழுத்திடும் வகையில், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us