/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்
/
கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஏப் 10, 2025 11:21 PM
கோவை; கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், கேரளாவை சேர்ந்த ரூபேஷ்,54, மனைவி ஷைனி,52, அனுாப்,37, மற்றும் கண்ணன்,56, வீரமணி,69,ஆகியோர், மே., 2015 ல், கோவை 'கியூ' பிரிவு போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ைஷனி, கண்ணன், வீரமணி, அனுாப் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரூபேஷ், கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

