sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலியாக பத்திரம் தயாரித்து மோசடி  செய்த கில்லாடி கைது

/

போலியாக பத்திரம் தயாரித்து மோசடி  செய்த கில்லாடி கைது

போலியாக பத்திரம் தயாரித்து மோசடி  செய்த கில்லாடி கைது

போலியாக பத்திரம் தயாரித்து மோசடி  செய்த கில்லாடி கைது


ADDED : அக் 13, 2024 06:11 AM

Google News

ADDED : அக் 13, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில், போலியாக கிரைய பத்திரம் தயாரித்துக் கொடுத்து, பலரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, ஒண்டிப்புதுார், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சாந்தாமணி, 42. இவர், அதே பகுதியில், 25 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிக்கிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில், பணம் சேர்த்து வந்தார். அவருக்கு, சூலுார் முத்துப்பள்ளன் வீதியைச் சேர்ந்த மணிகண்டன், 29 பழக்கமானார். அறக்கட்டளை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், சாந்தாமணிக்கு புது வீடு வாங்கித் தருவதாக கூறியுள்ளார். பத்திரச் செலவை மட்டும் சாந்தமணி ஏற்றுக்கொள்ளுமாறும், மீதித்தொகையை, அறக்கட்டளையில் ஏற்பாடு செய்து, வீடு வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார்.

அதை நம்பிய சாந்தாமணி, பத்திரச் செலவுக்கு பணம் கொடுத்தார். ஆனால், போலியாக ஒரு கிரைய பத்திரத்தை மணிகண்டன் தயார் செய்து கொடுத்தார். பின், பட்டணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை காட்டியுள்ளார். அவ்வீட்டில், சிறு பராமரிப்பு பணியிருப்பதாக கூறி, மீண்டும் பணம் கேட்டுள்ளார். சாந்தாமணியிடம் பணம் இல்லாததால், வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு, தனியார் பைனான்சில் அதிக விலைக்கு அடகு வைத்து, ரூ.1.39 லட்சம் வரை பணம் கொடுத்தார்.

அத்தொகையை பெற்றுக்கொண்ட மணிகண்டன், தன்னிடம் 10 வீடுகள் இருப்பதாகவும், வீடு இல்லாதவர்கள் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதை நம்பி, சாந்தாமணி தனது உறவினர்களை அறிமுகம் செய்துள்ளார். சாந்தாமணி உட்பட 11 பேரிடம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை என மொத்தம், ரூ.10 லட்சத்து, 72 ஆயிரத்து, 500 பணம் பெற்றுள்ளார்.

ஆனால், வீட்டை காட்டாமல் நாட்களை கடத்தி வந்துள்ளார். மணிகண்டனை குறித்து விசாரிக்க ஆரம்பத்தபோது, பலரிடம் மணிகண்டன் பணம் பெற்று ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. சிங்காநல்லுார் போலீசில் சாந்தாமணி புகார் அளித்தார். விசாரணையில், பலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்ததால், மணிகண்டனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us