sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.எம்.சி.எச்.,ல் இலவச மறு ஆலோசனை முகாம்

/

கே.எம்.சி.எச்.,ல் இலவச மறு ஆலோசனை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் இலவச மறு ஆலோசனை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் இலவச மறு ஆலோசனை முகாம்


ADDED : ஜூன் 06, 2025 05:55 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் குறித்த தன்மையை எடுத்துரைக்கும் வகையில், கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், மறு ஆலோசனை முகாம், ஜூன் 30 வரை நடக்கிறது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

தற்போதைய பரபரப்பாக இயங்கும் உலகில், அனைவரும் அதற்கேற்ப இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளோம். பெரும்பாலானோர், தங்கள் உடல் நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரமின்றி, இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.

தங்கள் குடும்பத்துக்காக முழு நேரமும் இயங்கும் ஆண், பெண் இருபாலரும் அன்றாட பணியில் ஈடுபடுவதில், சிறிது தடுமாற்றம், சோர்வு ஏற்படும்போதுதான், தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துகின்றனர்.

பரிசோதனைக்கு செல்லும்போது, புற்றுநோய் அறிகுறி தெரிந்தால், பயம் தொற்றிக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம், எப்படி இது நம்மை பாதித்தது என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.

பரிசோதனை அறிக்கையில் புற்றுநோயை உறுதி செய்து டாக்டர் தெரிவித்தாலும், இது சரியா என்பதை அறிந்து கொள்ள, மீண்டும் அந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு, வேறு ஒரு டாக்டரிடம் சென்று அவரது அறிக்கையையும் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய் மட்டுமின்றி, எந்த நோயாக இருந்தாலும், வேறு ஒரு டாக்டரிம் இரண்டாவது கருத்து கேட்பது தவறில்லை.

இருப்பினும், பலர் இதுகுறித்து இணையதளங்களில் தேடும்போது, பல்வேறு பதில்கள், விளக்கங்கள் கிடைக்கப்பெறுவதால், குழப்பமடைகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு இருக்கலாம். அவற்றுக்கு ஒரே மாதிரியான விளக்கங்கள் பொருந்தாது.

ஒரு டாக்டர் கூறியபின், மற்றொரு டாக்டரிடம் ஆலோசனை கேட்பது நல்லதுதான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது ஆலோசனை பெற, எந்த மருத்துவமனைக்கு செல்வது, எந்த டாக்டரை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படலாம்.

இதற்கு தீர்வு தரும் வகையில், கே.எம்.சி.எச்., சார்பில், இலவச மறு ஆலோசனை முகாம், ஜூன் 30 வரை நடக்கிறது. ஏதாவது பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பின், அதற்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us