sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.எம்.சி.எச்.,ல் மார்ச் 1 வரை கர்ப்பப்பை கட்டி பரிசோதனை முகாம்

/

கே.எம்.சி.எச்.,ல் மார்ச் 1 வரை கர்ப்பப்பை கட்டி பரிசோதனை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் மார்ச் 1 வரை கர்ப்பப்பை கட்டி பரிசோதனை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் மார்ச் 1 வரை கர்ப்பப்பை கட்டி பரிசோதனை முகாம்


ADDED : பிப் 20, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கர்ப்பப்பை கட்டியால் ஆபத்து இல்லை என்றாலும், சிறு சிறு தொந்தரவுக்கு வாய்ப்புள்ளது,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மகளிர் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் அன்புக்கனி சுப்பையன்.

அவர் கூறியதாவது:

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சாதாரணமாக இருந்தாலும், அலட்சியப்படுத்தக்கூடாது. மாதவிடாய் காலங்களில், சிலருக்கு அதிக வலி, அதிக உதிரப்போக்கு இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பதில் சிரமம், அடிவயிற்றில் எப்போதும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருத்தல் போன்றவை கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

பெண்களுக்கு சாதாரணமாக காணப்படும் புற்றுநோய் அல்லாத கட்டிதான், கர்ப்பப்பை கட்டி. இருந்தாலும், மாதவிடாய் கோளாறு களால், கட்டியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, சிறிய பிரச்னையாக இருந்தாலும், அதை தீர்க்க முயற்சி மேற்கொள்வது அவசியம். அப்போதுதான், எவ்வித தொந்தரவும் இன்றி, ஆரோக்கியமாக வாழமுடியும்.

கர்ப்பப்பையில் ஏதாவது பிரச்னை என்றால், அதை அகற்றிவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். எளிதாக குணப்படுத்தக்கூடிய இந்த கட்டியை, தழும்புகள் இன்றி, ஆஞ்சியோகிராம் முறையில் குணப்படுத்தலாம்.

இதற்கான அனைத்து நவீன வசதிகளும் கே.எம்.சி.எச்.,ல் உள்ளன. பரிசோதனையில் கர்ப்பப்பை கட்டி இருப்பது கண்டறியப்பட்டால், தகுந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர். வழக்கமான அறுவை சிகிச்சைக்கு பதில், நவீன தழும்பு இல்லாத சிகிச்சை அளிக்கிறோம்.

கே.எம்.சி.எச்., கதிர்வீச்சியல் துறையில், சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது. பிப்.,1ல் துவங்கிய முகாம், மார்ச் 1ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில், காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. இதில், இலவச ஆலோசனை, சலுகை கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 74188 87411என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us