/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்கவாத அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்: நரம்பியல் டாக்டர்கள் அறிவுரை
/
பக்கவாத அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்: நரம்பியல் டாக்டர்கள் அறிவுரை
பக்கவாத அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்: நரம்பியல் டாக்டர்கள் அறிவுரை
பக்கவாத அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்: நரம்பியல் டாக்டர்கள் அறிவுரை
ADDED : அக் 08, 2024 12:30 AM

கோவை : கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, நட்சத்திர ஓட்டலில் மூளை பக்கவாத தினத்தையொட்டி, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் அசோகன், கே.எம்.சி.எச்., டாக்டர் பிரகாஷ் உட்பட, பல டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் பின், டாக்டர் அசோகன் நிருபர்களிடம் கூறியதாவது:
மூளை பக்கவாதம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் 29ம் தேதி பக்கவாத தினம் அனுசரிக்கப்படுகிறது. அறிகுறிகளுடன் வருபவரை டாக்டர்கள் பரிசோதித்து, அது மூளை பக்கவாதமாக இருந்தால் மூளை நரம்பில் மருந்தை செலுத்தி, அடைப்பை நீக்கி குணப் படுத்தி விடலாம்.
மூளை பக்கவாதம் வர காரணம் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், அதிக உடல் எடை, புகைப்பிடித்தல், மன அழுத்தம், துாக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாதது ஆகியவை.
40 வயதை கடக்கும் போது, மருத்துவ பரிசோதனை மிக முக்கியம். பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கு தலையில் அடிபடுதல் போன்ற காரணத்தாலும், மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், வாழ்நாள் முழுவதும் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாரடைப்பிற்கு உள்ள விழிப்புணர்வு, மூளை பக்கவாதத்திற்கு இல்லாதது வேதனைக்குரியது.
இவ்வாறு, அவர் கூறினார்.