sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோவிலில் கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞம்

/

ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோவிலில் கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞம்

ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோவிலில் கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞம்

ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோவிலில் கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞம்


ADDED : ஆக 04, 2025 11:26 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆடி செவ்வாயை முன்னிட்டு, ஆர்.எஸ்.புரம் மேற்கு திருவேங்கடசாமி சாலையிலுள்ள காமாட்சியம்மன் கோவிலில், இன்று காலை முதல் மதியம் வரை, 'கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞம்' நடக்கிறது.

இது குறித்து, ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திர மண்டலி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி மண்டலி ஜெயந்தி ரமேஷ் மற்றும் கீதா ஆகியோர் கூறியதாவது:

ஆடிவெள்ளியை போன்று, ஆடி செவ்வாயும் மிகவும் விசேஷமானது. இந்நாளில், ஸ்ரீ காமாட்சி அம்பாளின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற பிரார்த்தனை செய்வது வழக்கம்.

காமாட்சிஅம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தால், லோகம் ஷேமமடைவதோடு அனைத்து சவுபாக்கியங்களும், அனைவருக்கும் கிடைக்கும்.

இந்த வைபவம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் பரிபூர்ண அனுக்கிரஹத்தின் பேரில் நடைபெறுகிறது. அதனால் எங்களது குழுவினர், 1008 பேர், காமாட்சியம்மன் கோவில் மண்டபத்தில், காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை ஐந்து பிரிவுகளாக, பாராயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞத்தில் பாராயணம் செய்யும் போது, காமாட்சி அம்பாளுக்கு குங்குமார்ச்சனை நடைபெறும். அப்போது அம்பாளுக்கு மங்களப்பொருட்கள் சமர்ப்பித்து, சிறப்பு வழிபாடுகள் நிறைவேற்றப்படும்.

மஹா யக்ஞத்தில் பங்கேற்போருக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத்துணி, மாங்கல்யசரடு, கண்ணாடி, சீப்பு, பழங்கள், பழரசம், பிரசாதம், வெற்றிலை, பாக்கு விரலி மஞ்சள், தேங்காய் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us