ADDED : ஜன 30, 2024 11:50 PM
ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரம்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது.
அதன்படி நேற்று கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமையில், கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 250 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 78.16 ரூபாய் முதல், 86.12 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 304 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 58.30 முதல், 74.40 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 554 கொப்பரை மூட்டைகளை, 82 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
கடந்த வாரத்தை விட, 174 மூட்டைகள் குறைந்து காணப்பட்டன; மூன்று ரூபாய், 62 பைசா விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்த வாரம், 18.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 249.30 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.