/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் கிருத்திகை பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
கோவில்களில் கிருத்திகை பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்களில் கிருத்திகை பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்களில் கிருத்திகை பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : செப் 22, 2024 11:56 PM

வால்பாறை: வால்பாறையில் உள்ள கோவில்களில் நடந்த, புரட்டாசி கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை பூஜை நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன் பின் காலை, 6:30 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
அதனை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல் முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில், அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி மாத கிருத்திகை பூஜை நடந்தது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, காளியண்ணன்புதூர், வள்ளி தெய்வானை உடனமர் செந்தூர் முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நேற்று நடந்தது. இதில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை போன்றவை நடந்தது. இதில், காளியண்ணன்புதூர் சுற்று வட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.