sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிேஷக பணி தீவிரம்

/

ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிேஷக பணி தீவிரம்

ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிேஷக பணி தீவிரம்

ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிேஷக பணி தீவிரம்


ADDED : பிப் 02, 2024 11:26 PM

Google News

ADDED : பிப் 02, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, யாக சாலைக்கான பணிகள் நடைபெறுகின்றன.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழா நடத்த திட்டமிட்டு கடந்த, மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில், மஞ்சள் அம்மன், சிவபெருமான், ராமபிரான், அஷ்டலட்சுமி, காலபைரவர், ஆஞ்சநேயர் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, வர்ணம் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், யாகசாலை அமைப்பதற்காக நேற்று முன்தினம் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், முக்கிய நிர்வாகிகள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவிலில் கும்பாபிேஷக விழா, வரும் மார்ச் மாதம், 20ம் தேதி காலை, 9:25 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் நடக்கிறது.

இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, யாக சாலையில், 55 யாக குண்டங்கள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us