/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலதண்டாயுதபாணி கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
/
பாலதண்டாயுதபாணி கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 03, 2025 11:42 PM
பொள்ளாச்சி, ;பொள்ளாாச்சி அருகே, நல்லுாரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், வரும், 7ம் தேதி, காலை, மகாகணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், நவகிரக ேஹாமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது.
மாலையில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முகற்கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு யந்திரபிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
வரும், 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு இரண்டாம் யாக பூஜை, 8:00 மணிக்கு கலசம் புறப்பாடு, 8:15 மணிக்கு விமான கலசத்துக்கு கும்பாபிேஷகமும், அதனை தொடர்ந்து, மகாகணபதி, பாலதண்டாயுதபாணிக்கு கும்பாபிேஷகமும் நடக்கிறது. அதன்பின், சிறப்பு அலங்கார வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.