/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தி விநாயகர் கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
/
சித்தி விநாயகர் கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 01, 2025 11:14 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி, மின்நகர் ஸ்ரீ சித்தி விநாயாகர் கோவில் கும்பாபிேஷக விழா, வரும், 8ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, வரும் 6ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமம், மாலை, 4:30 மணிக்கு, மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, மஹா சங்கல்பம், புண்யாக வாச்சனம், நவகவ்யம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பனம், ரஷாபந்தனம்; மலை, 6:30 மணிக்கு கலாகர்சனம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது.
வரும் 7ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, புண்யாக வாச்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, இரண்டாம் காலம் ேஹாமம் ஆரம்பம், 108 மூலிகை திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசார பூஜை நடக்கிறது.
மாலை, 6:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, புண்யாக வாச்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மூன்றாம் கால ேஹாமம் ஆரம்பம், 108 மூலிகை திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசார பூஜை நடக்கிறது.
இரவு, 9:00 மணிக்கு சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 8ம் தேதி காலை, 5:30 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம், உள்ளிட்டவைகளை தொடர்ந்து, நான்காம்கால ேஹாமம் ஆரம்பம், நாடி சந்தனம், ஸ்பர்ஸாஹுதி, தக்வாச்சனை, 108 மூலிகை திரவியாஹுதி, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, உபசார பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
காலை, 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, மூலாலைய புனருத்தாரண கும்பாபிேஷகம் மற்றும் புதிய பரிவார மூர்த்திகளான ஞானசரஸ்வதி, சுப்ரமணியர், தட்ஷணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கா பரமேஸ்வரிக்கு நுதன அஷ்டபந்தன கும்பாபிேஷகம் நடக்கிறது.