/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : பிப் 03, 2025 11:52 PM

ஆனைமலை; ஆனைமலை தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில், 33 ஆண்டுக்கு பின், நேற்று கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
ஆனைமலையில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 33 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பின், கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டன.
கடந்த, 1ம் தேதி, கணபதி ேஹாம பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. நேற்று, காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:15 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, மகாகணபதி, தர்மராஜா, திரவுபதி அம்மனுக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. பிரசன்ன ஸ்ரீநிவாசன் பொறுப்பேற்று, கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தார். கும்பாபிேஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின், மதியம், மூல மூர்த்திகளுக்கு திருக்கல்யாண வைபவமும் இடம்பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சுவாமிகள் திருவீதி உலாவும் நடந்தது.
இன்று முதல் வரும், 15ம் தேதி வரை, மண்டல பூஜையும் நடத்தப்படவுள்ளது. கோவில் அறங்காவலர் செந்தில்வேல் தலைமையில் நடந்த விழாவில் திருப்பணிக் குழுவினர் கலந்து கொண்டனர்.