/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 03, 2025 11:38 PM

சோமனூர்:  ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
சோமனூர் அடுத்த ராமாச்சியம் பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த, 1ம் தேதி காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பல்வேறு புனித இடங்களில் இருந்து கெண்டுவரப்பட்ட தீர்த்தக் குடங்களுக்கு,சோழீஸ்வரர் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டன.  பெண்கள், தீர்த்தக் குடங்களை எடுத்து மாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், முதல்கால ஹோமம் துவங்கியது. நேற்று முன்தினம்  இரண்டு கால ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தன. ராயர்பாளையம் வேலவன் காவடி குழுவினரின் காவடியாட்டம் பக்தர்களை கவர்ந்தது.
நேற்று காலை, நான்காம் கால ஹோமம் முடிந்து புனித நீர் கலசங்கள் மேளதாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன.  காலை, 9:30 மணிக்கு, விமான கலசம் மற்றும் ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.
விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

