/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசி விஸ்வநாதருக்கு கும்பாபிேஷகம் : சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது
/
காசி விஸ்வநாதருக்கு கும்பாபிேஷகம் : சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது
காசி விஸ்வநாதருக்கு கும்பாபிேஷகம் : சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது
காசி விஸ்வநாதருக்கு கும்பாபிேஷகம் : சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது
ADDED : நவ 27, 2025 04:56 AM

உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர், தத்தாத்ரேய சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, நேற்று பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.
மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில், அமராவதி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த காசி விசாலாட்சியம்மன் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலும், அருகில், தத்தாத்ரேய சுவாமி கோவிலும் அமைந்துள்ளன. சுற்றுக்கோவில் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும், இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழா, 25ம் தேதி, மங்கள இசையுடன் துவங்கியது.
பின்னர் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று சாந்தி ேஹாமம், திசா ேஹாமம் உள்ளிட்ட பல்வேறு ேஹாமங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இன்று, (27ம் தேதி) காலை, 8:00 மணிக்கு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், வரும் 28ம் தேதி இரண்டாம் கால யாக வேள்வி துவங்குகிறது. வரும் 30ம் தேதி அதிகாலை ஆறாம் கால யாக வேள்வி துவங்குகிறது. காலை, 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் அனைத்து பரிவார விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
காலை, 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், விசாலாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் தத்தாத்ரேய சுவாமிகளுக்கு மகா கும்பாபி ேஷகம் நடக்கிறது.

