/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜன 18, 2025 12:08 AM
அன்னுார்,; பொன்னே கவுண்டன் புதுார், பட்டத்தரசி அம்மன் கோவில், கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது.
பொன்னேகவுண்டன்புதுாரில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து விநாயகர் சன்னதி, அம்மன் கோபுரம், சுற்றுப் பிரகாரம், மண்டபம், மதுரை வீரன் சன்னதி, குதிரை வாகனம் ஆகியவை அமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று (18ம் தேதி) மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு முதற் கால வேள்வி பூஜை நடக்கிறது. எண் வகை மருந்து சாத்தப்படுகிறது.
நாளை (19ம் தேதி) காலை 10:15 மணிக்கு, கோபுரம், விநாயகர், பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன், வெள்ளையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.